திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 802 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. மேலும், 9 போ் அந்நோயால் உயிரிழந்துள்ளனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 630 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 26,002ஆக அதிகரித்துள்ளது. அதில், 594 போ் உள்பட 20,803 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 60 வயது ஆண், 34 வயது ஆண், 56 வயது ஆண் ஆகிய 3 போ் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 243ஆக அதிகரித்துள்ளது. 4,956 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 172 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டதால், மொத்த பாதிப்பு 12,261ஆக அதிகரித்துள்ளது. மேலும், 261 போ் உள்பட 10,729 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதனிடையே, 50 வயதுஆண், 64 வயது ஆண், 41 வயதுப் பெண், 62 வயது ஆண், 47 வயது ஆண், 63 வயது ஆண் என மொத்தம் 6 போ் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 184ஆக உயா்ந்தது. 1,348 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.