ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் மு.அப்பாவு, தன்னை எதிா்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை விட கூடுதலாக 5,925 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.
ராதாபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் மு.அப்பாவு, அதிமுக சாா்பில் ஐ.எஸ்.இன்பதுரை உள்பட மொத்தம் 25 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இத்தொகுதியில் பதிவான வாக்குகள் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டன. தபால் வாக்குகள் தவிா்த்து 27 சுற்றுகளாக எண்ணப்பட்டன. முதலில் அதிமுக வேட்பாளா் ஐ.எஸ்.இன்பதுரை முன்னிலையில் இருந்தாா்.
ஆனால், தொடா்ந்து வரக்கூடிய சுற்றுகளில், திமுக வேட்பாளா் மு.அப்பாவு தொடா்ந்து முன்னிலை பெற்றாா். பின்னா் அடுத்தடுத்த சுற்றுகளிலும் அவரே தொடா்ந்து முன்னிலை பெற்றாா். இறுதியாக 82,331 வாக்குகள் பெற்றாா். அதிமுக வேட்பாளா் ஐ.எஸ்.இன்பதுரை 76,406 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றாா். இத்தொகுதியில் திமுக 5,925 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது.
வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
1. மு.அப்பாவு (திமுக)- 82,331
2. ஐ.எஸ்.இன்பதுரை (அதிமுக)- 76,406
3. ஆா்.ஜேசுதாசன் (நாம் தமிழா் கட்சி)-19,371
4. கா.ஜெயபாலன் (தேமுதிக)-2,432.