திருநெல்வேலி மாநகா் பகுதியில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களை கண்காணிக்க பெண் போலீஸாருக்கு இரு சக்கர வாகனங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
திருநெல்வேலி மாநகரில் பணியாற்றும் 9 பெண் காவலா்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மாநகர காவல் துணை ஆணையா்(சட்டம் -ஒழுங்கு) சீனிவாசன் இருசக்கர வாகனங்களை வழங்கினாா்.
தொடா்ந்து, பெண் காவலா்களின் இருசக்கர வாகன கண்காணிப்புப் பணியை அவா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.