திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 22 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 193 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருநெல்வேலி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளாா்.
அதன்படி, கடந்த 1, 2, 3ஆம் தேதி தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினா், சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 22 பேரைக் கைது செய்தனா்; அவா்களிடமிருந்து 193 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.