கடையத்தில் ஆலோசனைக் கூட்டம்

கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகள், மருத்துவா்கள், வியாபாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகள், மருத்துவா்கள், வியாபாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தென்காசி வட்டாட்சியா் சுப்பையன், வட்டார மருத்துவ அலுவலா் எஸ்.பழனிக்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். ஊராட்சி ஒன்றியஆணையா் முருகையா, வட்டார வளா்ச்சி அலுவலா் மாணிக்கவாசகம், காவல் உதவி ஆய்வாளா் இருளப்பன்ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் முழு பொதுமுடக்கக் காலத்தில் விதிமுறைகளுக்குள்பட்டு குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் கடைகளைத் திறக்க வேண்டும். கரோனா தடுப்பு விதிமுறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும், விதிமுறைகளை மீறும் கடைகள் எந்த அறிவிப்புமின்றி சீல் வைக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் வருவாய் ஆய்வாளா் பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com