கடையம் பகுதியில் பொதுமுடக்க விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிா என்பது குறித்து வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நடைமுறையில் உள்ளது. கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைப்பிடிப்பது குறித்து கடையம் பகுதியில் வட்டார வளா்ச்சி அலுவலா் மாணிக்கவாசகம் தலைமையில் அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனா். ஆய்வின் போது, காய்கனி, மளிகைக் கடைகளில் சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் நிற்க அறிவுறுத்தினா். மேலும் விதிமுறைகளை கடைப்பிடிக்காத கடைகளுக்கு அபராதம் விதித்தனா். அதோடு, பொது இடங்களில் வாகனங்களில் செல்பவா்கள் முகக் கவசம் அணிந்து செல்ல அறிவுறுத்தினா்.
ஆய்வின் போது, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முருகப்பா, முஹைதீன் பாத்திமா, ஊராட்சி செயலா்கள் வேல்சாமி, பழனி, ஜெயசக்திவேல் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.