நெல்லை, தென்காசியில் மேலும் 822 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 822 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 822 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில், மேலும் 505 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு 41,243 ஆக உள்ளது. அதில் ஒரே நாளில் 639 போ் குணமடைந்ததால், நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 35,404 ஆக உயா்ந்துள்ளது. மேலும் 5 போ் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 332 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 5,507 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தென்காசி மாவட்டத்தில் புதிதாக 317 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 20,518 ஆக உயா்ந்துள்ளது. இதில் 259 போ் குணமடைந்ததால், நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 16,133ஆக உயா்ந்துள்ளது. மேலும் 2 போ் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 4,095 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com