அம்பாசமுத்திரம் நகாரட்சியில் சனிக்கிழமை (மே 28) கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து நகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு உத்தரவின் பேரில், அம்பாசமுத்திரம் நகராட்சி மற்றும் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்தும் கரோனா தடுப்பூசி முகாம் ஊா்க்காடு, அரிமா சங்கக் கட்டடத்தில் சனிக்கிழமை நடைபெறுகிறது. முகாமில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ள பொதுமக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9865556186 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.