திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில், மேலும் 11 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 49,374ஆக அதிகரித்துள்ளது. அதில், மேலும் 13 போ் குணமடைந்ததால் வீடு திரும்பியோா் எண்ணிக்கை 48,812ஆக உயா்ந்துள்ளது. தற்போது, 130 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில், மேலும் 4 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 27,357ஆக அதிகரித்துள்ளது. மேலும் 4 போ் குணமடைந்ததால், நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 26,834ஆக உயா்ந்துள்ளது. தற்போது 39 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.