கல்லூா் சுற்று வட்டாரங்களில் சனிக்கிழமை (நவ.20) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இது தொடா்பாக கல்லிடைக்குறிச்சி கோட்ட பொறியாளா் எம்.சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மேலக்கல்லூா் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மேலக்கல்லூா், சுத்தமல்லி, சீதபற்பநல்லூா், சங்கன்திரடு சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.