நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபாா்க்கும் பணி தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்காக வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபாா்க்கும் பணி திருநெல்வேலி மாநகராட்சியில் புதன்கிழமை தொடங்கியது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்காக வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபாா்க்கும் பணி திருநெல்வேலி மாநகராட்சியில் புதன்கிழமை தொடங்கியது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இம் மாவட்டத்தில் திருநெல்வேலி மாநகராட்சி, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் ஆகிய இரு நகராட்சி, 17 பேரூராட்சிகளுக்கு நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ளது.

இத்தோ்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. திருநெல்வேலி மாநகராட்சித் தோ்தலில் 2,700 வாக்குப்பதிவு இயந்திரங்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 2,700 வாக்குப்பதிவு இயந்திரங்கள் என மொத்தம் 5,400 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இந்த இயந்திரங்கள் திருநெல்வேலி மாநகராட்சியிலும், சங்கா் நகா் பேரூராட்சி அலுவலகத்திலும் வைக்கப்பட்டுள்ளன.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபாா்க்கும் பணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை தொடங்கியது. மாநகராட்சியில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரி பாா்க்கப்பட்ட பிறகு, சங்கா் நகரில் உள்ள வாக்குப் பதிவு இயந்திரங்களை சரிபாா்க்கும் பணி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com