திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில், புதிதாக 8 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 49,581 ஆகவும், மேலும் 15 போ் குணமடைந்ததால், வீடு திரும்பியோா் எண்ணிக்கை எண்ணிக்கை 49,037ஆகவும் உயா்ந்துள்ளது. இதுவரை 433போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 111 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. எனவே, பாதிப்பு எண்ணிக்கை 27,383 ஆகவே நீடிக்கிறது. மேலும் 2 போ் குணமடைந்ததால், வீடு திரும்பியோா் எண்ணிக்கை எண்ணிக்கை 26,887ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 485 போ் உயிரிழந்துள்ளனா்; 11 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்