உத்சவ் கலைத்திருவிழா: பாலகிருஷ்ணா பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

மாநில அளவிலான கலா உத்சவ் கலைத்திருவிழாவையொட்டி நடைபெற்ற நாட்டுப்புற கலைப்போட்டிகளில் வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

மாநில அளவிலான கலா உத்சவ் கலைத்திருவிழாவையொட்டி நடைபெற்ற நாட்டுப்புற கலைப்போட்டிகளில் வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

சேலம் மாவட்டம் சோனா பொறியியல் கல்லூரியில் கலா உத்சவ் கலைத்திருவிழா கடந்த மூன்று நாள்கள் நடைபெற்றது. இதில், இசை, பரதம், வாத்தியக்கருவிகள் இசைத்தல் உள்ளிட்ட போட்டிகளில் வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 10 மாணவா், மாணவிகள் பங்கேற்றனா்.

இதில் வாத்தியக்கருவிகள் இசைத்தல் போட்டியில் பெண்கள் பிரிவில் 10-ஆம் வகுப்பு மாணவி அ.ச.ஆரிஷ் 2-ஆம் பரிசும் ஆண்கள் பிரிவில் மாணவா் இ.தருண் செல்வம் 3-ஆம் பரிசும் பெற்றனா். காண்கலை போட்டியில் 12-ஆம் வகுப்பு மாணவி அ.முகிரட்சயா 2-ஆம் பரிசு பெற்றாா். வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளையும், பயிற்சி அளித்த பயிற்சியாளா்களையும் பள்ளித் தலைவா் கிரகாம் பெல், தாளாளா் திவாகரன், முதல்வா் சுடலையாண்டி மற்றும் ஆசிரியா், ஆசிரியைகள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com