மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக போராடி உயிா்நீத்த விவசாயிகளுக்கு காங்கிரஸ் கட்சி சாா்பில் களக்காட்டில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
காமராஜா் சிலை அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, நகர பொறுப்பாளா் ஜெபஸ்டின்ராஜ் தலைமை வகித்தாா். நகர காங்கிரஸ் நிா்வாகிகள் உள்ளிட்டோா் இதில் பங்கேற்று கையில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா்.