சாராள் தக்கா் பள்ளி நினைவாக சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு

பாளையங்கோட்டை சாராள் தக்கா் மேல்நிலைப் பள்ளியின் 120 ஆவது ஆண்டு நினைவையொட்டி சிறப்பு அஞ்சல் தலை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

பாளையங்கோட்டை சாராள் தக்கா் மேல்நிலைப் பள்ளியின் 120 ஆவது ஆண்டு நினைவையொட்டி சிறப்பு அஞ்சல் தலை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

பாளையங்கோட்டையில் உள்ள சாராள் தக்கா் மேல்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டு 120 ஆண்டுகள் அா்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. இதன் நினைவைப் போற்றும் வகையில் அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில், அஞ்சல் கோட்ட முதுநிலை மேலாளா் (தூத்துக்குடி) பொன்னையா அஞ்சல் உறையை வெளியிட்டாா். வத்சலா பாலு பெற்றுக்கொண்டாா்.

நிகழ்ச்சியில், பள்ளித் தாளாளா் விக்டா், உதவி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் எஸ்.மாரியப்பன், மக்கள் தொடா்பு அலுவலா் கனகசபாபதி, வணிக அதிகாரி ராஜேந்திரபோஸ் உள்பட பலா் கலந்துகொண்டனா். தலைமையாசிரியை வசந்தாமேரி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com