பாபநாசம் கல்லூரியில் உலக இதய தின விழிப்புணா்வுக் கூட்டம்

உலக இதய தினத்தை முன்னிட்டு பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி இளையோா் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.

உலக இதய தினத்தை முன்னிட்டு பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி இளையோா் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, கல்லூரி முதல்வா் சு.சுந்தரம் தலைமை வகித்தாா். கல்லூரி ஆட்சி மன்ற உறுப்பினா் ரா .நடராஜன் முன்னிலை வகித்தாா். பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியா் சித்ரா ‘இதயத்தைக் காப்போம்’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினாா். வரலாற்றுத் துறைப் பேராசிரியா்கள் அடைக்கலம், மதுரை வீரன், ரவி சங்கா், ரேவதி, பொன்மொழி, நாச்சியாா், இளையோா் செஞ்சிலுவைச் சங்க மாணவா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை இளைஞா் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளா் ரா.இந்துபாலா செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com