திருநெல்வேலி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக 22 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுவோா் மீது போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். அதன்படி, மாவட்டத்தில் போலீஸாா் நடத்திய சோதனையில் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்டதாக 22 பேரை புதன்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 1,046 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.