லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி

களக்காடு அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பலத்த காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

களக்காடு அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பலத்த காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

சிதம்பராபுரம் புதுக்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த பாக்கியநாதன் மகன் மைக்கேல்ராஜ் (43). இவா் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் களக்காடு-நான்குனேரி சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, நிலை தடுமாறி சாலையில் விழுந்தாராம். அப்போது, அவ்வழியாக வந்த லாரியின் சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்த அவரை மீட்டு நான்குனேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com