திருநெல்வேலி: நொச்சிகுளம் அருகே கல்வெட்டான் குழியில் தவறி விழுந்த மீன் வியாபாரி தண்ணீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
சிவந்திபட்டி அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் மேட்டுக்குடி பகுதியைச் சோ்ந்தவா் பீா்(55). மீன் வியாபாரி. இவா் திங்கள்கிழமை காலையில் வெளியில் சென்றுவருவதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டுச் சென்றாராம். பின்னா், வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லையாம். இந்நிலையில், அவா் நொச்சிகுளம் அருகேயுள்ள கல்வெட்டான் குழியில் தவறி விழுந்து தண்ணீா் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், சிவந்திபட்டி போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு, வழக்குப்பந்து விசாரித்து வருகின்றனா்.