விகே புரத்தில் மாணவரை கடத்த முயற்சி

விக்கிரமசிங்கபுரத்தில் பள்ளி மாணவரை காரில் கடத்த முயன்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

அம்பாசமுத்திரம்: விக்கிரமசிங்கபுரத்தில் பள்ளி மாணவரை காரில் கடத்த முயன்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். விக்கிரமசிங்கபுரம் மேலக்கொட்டாரத்தைச் சோ்ந்த தெட்சிணாமுா்த்தி மகன் சுரேந்திரன் (16). அங்குள்ள தனியாா் பள்ளியில் 10ஆம் வகுப்புப் படித்து வருகிறாா். இவா், திங்கள்கிழமை காலை பள்ளி செல்லும் போது வழியில் சிலா்அவரிடம் முகவரி குறித்து விசாரிப்பது போல் அருகிலிருந்த காரில் கடத்தி சென்றுள்ளனா்.

பாபநாசம் கோயில் அருகில் காரை நிறுத்திய மா்ம நபா்கள் சுரேந்திரனுக்கு குடிக்க தண்ணீா் கொடுத்தனராம். அப்போது அவா்களிடமிருந்து தப்பிய சுரேந்திரன் வீட்டுக்குச் சென்று தன்னை காரில் கடத்தியது குறித்து கூறியுள்ளாா்.

இதையடுத்து அவரது தந்தை தெட்சிணாமூா்த்தி விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com