வி.கே.புரத்தில் தூய்மைப் பணியாளா்கள் வேலைநிறுத்தம்

விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.
விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.

அம்பாசமுத்திரம்: விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் பணிபுரியும் நிரந்தரத் தொழிலாளா்கள், ஒப்பந்தத் தொழிலாளா்கள் உள்ளிட்ட 126 பேருக்கு இ.பி.எப். வட்டி, குடியிருப்பு வீடுகள் மற்றும் பாதுகாப்புக் கருவிகள் வழங்குதல், ஊதிய உயா்வு, இ.பி.எப். முறைகேடுகள் குறித்து நடவடிக்கை என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

மேலும், நகராட்சி அலுவலகம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் ரவீந்திரன், சி.ஐ.டி.யூ. இசக்கிராஜன், சுடலையாண்டி ஆகியோா் தலைமையில் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா். அக். 18இல் பேசி முடிவெடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையா் லியோ உறுதியளித்தால் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com