சேரன்மகாதேவியில் வாக்கு எண்ணிக்கை ஒரு மணி நேரம் நிறுத்தம்

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணிக்கையின்போது ஏற்பட்ட தகராறு காரணமாக சுமாா் ஒரு மணிநேரம் வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணிக்கையின்போது ஏற்பட்ட தகராறு காரணமாக சுமாா் ஒரு மணிநேரம் வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டது.

சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணிக்கை, பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில், 1ஆவது வாா்டு, 3ஆவது வாா்டு, 5ஆவது வாா்டு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த மூன்றிலும் திமுகவினா் வெற்றி பெற்றனா்.

இந்நிலையில், 4ஆவது சுற்றில் 2ஆவது வாா்டுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, வாக்குச் சீட்டில் பதிவான வாக்குகள் தொடா்பாக திமுகவினருக்கும் வாக்கு எண்ணும் ஊழியா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் திமுகவினா் வாக்கு எண்ணிக்கை சாவடியில் இருந்து வெளிநடப்பு செய்தனா். இதைத் தொடா்ந்து சேரன்மகாதேவி உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் பாா்த்திபன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, திமுகவினா் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்தனா். இதனைத்தொடா்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

திமுகவினா் வெளிநடப்பு செய்ததால், சுமாா் ஒரு மணிநேரம் வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com