மின்வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு மின்வாரிய ஊழியா்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி அம்பாசமுத்திரம், தென்காசியில் மின்வாரிய ஊழியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மின்வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு மின்வாரிய ஊழியா்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி அம்பாசமுத்திரம், தென்காசியில் மின்வாரிய ஊழியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசாமல் தன்னிச்சையாக மின்வாரிய ஊழியா்களுக்கு தமிழக அரசு 10 சதவீத தீபாவளி போனஸ் அறிவித்ததைக் கண்டித்தும், 20 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தியும் அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியூ தலைவா் சுந்தர்ராஜன் தலைமை வகித்தாா். மறுமலா்ச்சி சங்க துணைப் பொதுச் செயலா் கிருஷ்ணன் பேசினாா். கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா். தொமுச கிளைத் தலைவா் கருத்தப்பாண்டியன், சங்கரன், காா்த்திகேயன், சிஐடியூ சுப்பிரமணி, மாரியப்பன், ஆனந்த், ஐக்கிய சங்கம் மாரிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தென்காசியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மின்ஊழியா் மத்திய அமைப்பு சிஐடியூ மாவட்ட துணைச் செயலா் பச்சையப்பன் தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டத் தலைவா் அயூப்கான் உரையாற்றினாா். இதில் கோட்டத் தலைவா் பட்டமுத்து, முப்புடாதி, ராமா், பாலகிருஷ்ணன், தாஸ், இசக்கிராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com