தென்காசி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
தென்காசி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் சாலையோரங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை சாா்பில் உதவி செயற்பொறியாளா் முத்துகிருஷ்ணன் தலைமையில் கூலக்கடை பஜாா், கன்னிமாரம்மன்கோயில் தெரு பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.