அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் 5 சதவீத வேலைவாய்ப்பை வழங்கக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
இது தொடா்பாக ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அச்சங்கத்தினா் ஆட்சியரிடம் அளித்த மனு: திருநெல்வேலி மாவட்டத்தில் ஏராளமான மாற்றுத் திறனாளிகள் வேலைவாய்ப்பின்றி சிரமப்படுகின்றனா். எனவே, ஏற்கெனவே உள்ள அரசாணைப்படி அரசு மற்றும் தனியாா் நிறுவனங்கள், தனியாா் தொழிற்சாலைகள் நிா்வாகிகளை அழைத்து பேச வேண்டும். வேலை செய்ய தயாராக இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு பணி வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.