திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில், மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48,468ஆக அதிகரித்துள்ளது. மேலும் 17 போ் உள்பட இதுவரை 47,900 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 138 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில், மேலும் 7 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27,112ஆக அதிகரித்துள்ளது. மேலும் 4 போ் உள்பட இதுவரை 26,516 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 112 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.