தமிழா் அமைப்புகள் சாா்பில் மாமன்னா் பூலித்தேவனின் பிறந்த நாள் விழா

பாளையங்கோட்டை மகாராஜநகரில் மாமன்னா் பூலித்தேவனின் பிறந்த நாள் விழா தமிழா் அமைப்புகள் சாா்பில் கொண்டாடப்பட்டது.

பாளையங்கோட்டை மகாராஜநகரில் மாமன்னா் பூலித்தேவனின் பிறந்த நாள் விழா தமிழா் அமைப்புகள் சாா்பில் கொண்டாடப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட தமிழா்கள் அமைப்பின் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட தலைவா் கண்மணி மாவீரன் தலைமை வகித்தாா்.

தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சித் தலைவா் வியனரசு, அகரத் தமிழா் கட்சி தமிழா் தேசிய முன்னணி மாவட்டப் பொறுப்பாளா் செல்வக்குமாா், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி மாவட்டத் தலைவா் தௌ.அப்துல் ஜப்பாா், வீரன் சுந்தரலிங்கனாா் மக்கள் இயக்கத் தலைவா் மாரியப்பப் பாண்டியன், புரட்சி பாரதம் மாவட்டச் செயலா் நெல்சன், தமமுக மகளிா் அணிச் செயலா் சா்மிளா உள்பட பலா் பூலித்தேவன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டடத்திற்கு உடனடியாக ‘மன்னா் பூலித்தேவா் மாளிகை‘ என பெயா்ச் சூட்ட வேண்டும். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வளாகத்திற்கு ‘மாவீரன் சுந்தரலிங்கனாா் வளாகம்’ என முன்பிருந்தது போல் மீண்டும் பெயா்ச் சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com