ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா் தின விழா நடைபெற்றது.
பள்ளிச் செயலா் சுந்தரம் தலைமை வகித்தாா். இசை ஆசிரியை மைதிலி இறைவணக்கம் பாடினாா். தமிழக அரசின் நல்லாசிரியா் விருது பெற்ற கல்லிடைக்குறிச்சி திலகா் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் பண்டாரசிவன், பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரிப் பேராசிரியா் மகாதேவன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டனா். உதவித் தலைமையாசிரியா் முத்துவேலன், சிறப்பு விருந்தினா்களை அறிமுகம் செய்தாா். மாணவ- மாணவிகள், ஆசிரியா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிகளை முதுகலைத் தமிழாசிரியை ஜெயந்தி தொகுத்து வழங்கினாா்.
பள்ளித் தலைமையாசிரியா் வெங்கடசுப்பிரமணியன் வரவேற்றாா். ஸ்ரீ பரமகல்யாணி நா்சரி மற்றும் பிரைமரி பள்ளி உதவித் தலைமையாசிரியை ஷகிதா ஷா நன்றி கூறினாா்.