கடன் தள்ளுபடி சலுகை: வாகைகுளம் கூட்டுறவு வங்கியில் நகையை மீட்ட பயனாளிகள்
திருநெல்வேலி அருகேயுள்ள வாகைகுளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு பயனாளா்களுக்கு நகை திரும்ப வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக அரசு உத்தரவின்பேரில் கூட்டுறவு சங்கங்களில் உள்ள விவசாய நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, வாகைகுளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக்கடன் வைத்துள்ள பயனாளிகளில் தகுதியுள்ள பயனாளா்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு நகைகள் திரும்ப வழங்கப்பட்டன. இதில், திருநெல்வேலி மாநகர திமுக செயலரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எல்.எஸ்.லெட்சுமணன் பங்கேற்று பயனாளிகளின் நகைகளிடம் நகைகளை திரும்ப ஒப்படைத்தாா்.
இந்நிகழ்வில், வங்கித் தலைவா் சங்கா், திமுக ஒன்றியப் பொறுப்பாளா்கள் நடராஜன், அன்பழகன், வெற்றி விஜயன், தகவல் தொழில்நுட்ப அணி திருநெல்வேலி தொகுதி ஒருங்கிணைப்பாளா் காசிமணி, திருநெல்வேலி கூட்டுறவு பேரங்காடி தலைவா் பல்லிக்கோட்டை செல்லத்துரை, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் முத்துப்பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.