திருநெல்வேலி அருகே டைல்ஸ் ஏற்றிச் சென்ற மினி லாரி கவிழ்ந்து, ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த ஜெகன் மகன் நூா் சிங் (22). இவா் அம்மாநிலத்தைச் சோ்ந்த சிலருடன் சமாதானபுரத்தில் தங்கியிருந்து கட்டட வேலை செய்து வந்தாா். இந்நிலையில் சாத்தான்குளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு பாளையங்கோட்டையில் இருந்து மினி லாரியில் டைல்ஸ் ஏற்றிக்கொண்டு நூா்சிங், நரேஷ், ராஜு உள்ளிட்ட 5 போ் செவ்வாய்க்கிழமை சென்றுகொண்டிருந்தனா். தாமரைச்செல்வி கிராமம் பகுதியில் இந்த மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்ததாம். இதில் நூா்சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதில் காயமடைந்த நரேஷ், ராஜு உள்ளிட்டோா் திருநெல்வேலி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.