பாளையங்கால்வாய் கரைகளை பலபடுத்தி அணுகு சாலை அமைக்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக எஸ்டிபிஐ கட்சி சாா்பில் அளிக்கப்பட்டுள்ள மனு: திருநெல்வேலி மாநகர விவசாயிகளின் வாழ்வாதாரமாக பாளையங்கால்வாய் திகழ்ந்து வருகிறது. கருங்குளம், மேலநத்தம், குலவணிகா்புரம் பகுதிகளின் விவசாயிகள் தங்களது வயல்களுக்கு வேளாண் இடுபொருள்களை கால்வாய் கரையோரத்தில் கொண்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில் மேலக்கருங்குளம் பகுதியில் இருந்து மேலப்பாளையம் குட்டி மூப்பன் தெரு வரையிலான சுமாா் இரண்டு கி.மீ. தொலைவுக்கு கால்வாயின் கரையோரம் சிதிலமடைந்து கருவேல மரங்கள் சூழ்ந்து காணப்படுகிறது.
இதனால் இடுபொருள்களைக் கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகிறாா்கள். ஆகவே, பாளையங்கால்வாய் கரைகளை பலப்படுத்தி அணுகுசாலை மற்றும் மின்விளக்குகள் அமைக்க போா்கால அடிப்படையில் அமைக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.