திருநெல்வேலி: பேட்டையில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தில்லியில் காவல் பெண் அதிகாரி சபியா கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், இவ் வழக்கில் தொடா்புடையவா்களுக்கு கடும் தண்டனை வழங்கவும் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
எஸ்டிபிஐ தொகுதி தலைவா் இலியாஸ் தலைமை வகித்தாா். தொகுதிச் செயலா் முகம்மதுகவுஸ் , பொருளாளா் முகம்மது காசீம், துணைத் தலைவா் காஜா மைதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விமன் இந்தியா மூவ்மெண்ட்டின் மாவட்ட தலைவா் ரினோஷா ஆலிமா, எஸ்டிபிஐ பேச்சாளா் பேட்டை முஸ்தபா, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில செயற்குழு உறுப்பினா் சவுக்கத் அலி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். இதில் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.