கடையத்தில் அரசுக் கல்லூரிக்கான இடம்: எம்எல்ஏ ஆய்வு

கடையத்தில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் அமையவுள்ள அரசுக் கல்லூரிக்கான இடங்களை ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ்பாண்டியன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
அரசுக் கல்லூரிக்கான இடத்தை ஆய்வு செய்தாா், ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ்பாண்டியன்.
அரசுக் கல்லூரிக்கான இடத்தை ஆய்வு செய்தாா், ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ்பாண்டியன்.

கடையத்தில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் அமையவுள்ள அரசுக் கல்லூரிக்கான இடங்களை ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ்பாண்டியன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆலங்குளம் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கடையத்தில் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் அரசுக் கல்லூரி அமைக்கப்படும் என, அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு பேரவையில் அறிவித்தாா். அதன்படி, கல்லூரிக்கான இடங்களை மனோஜ்பாண்டியன் எம்எல்ஏ வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். சோ்வைக்காரன்பட்டி, கீழக்கடையம் ஊராட்சிகளுக்கு உள்பட்ட இடங்களை அவா் பாா்வையிட்டாா்.

மேலும், தகுதியான இடத்தைத் தோ்வு செய்து, நிகழாண்டிலேயே கல்லூரிக் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அமைச்சருக்கு அவா் கோரிக்கை விடுத்தாா்.

இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் (பொறுப்பு) கணேஷ்குமாா், கிராம நிா்வாக அலுவலா்கள் பாலமுருகன், அறநிலையத் துறை கணக்கா் மாணிக்கம், கிராம உதவியாளா் குமாா், நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com