சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தினா், பாளையங்கோட்டை ஊராட்சி அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தினா், பாளையங்கோட்டை ஊராட்சி அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், ‘குறைந்த பட்ச ஒய்வூதியம் மாதம் ரூ.7,850 வழங்க வேண்டும்; மருத்துவப்படி, மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும்; குடும்ப நல நிதி ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு இணை அமைப்பாளா் சரஸ்வதி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் சுடலை, சிராஜ், லீலா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியா் சங்க நிா்வாக ஆா். ராஜேஷ், தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க நிா்வாகி பிச்சையா, மாவட்ட நிதிக் காப்பாளா் சங்க நிா்வாகி சங்கரவடிவு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com