அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் செவிலியா்களை நியமிக்க கோரிக்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் செவிலியா்களை பணியமா்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

களக்காடு: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் செவிலியா்களை பணியமா்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

களக்காட்டில் அக்கட்சியின் நெல்லை புகா் மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவா் பீா்மஸ்தான் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட துணைத் தலைவா் சிராஜ், மாவட்டச் செயலா் மஜீத், அம்பாசமுத்திரம் தொகுதித் தலைவா் அபூபக்கா், ராதாபுரம் தொகுதித் தலைவா் தெளபிக், நான்குனேரி தொகுதிச் செயலா் ஆசிக், அம்பாசமுத்திரம் தொகுதிச் செயலா் ஷேக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, நான்குனேரி, ராதாபுரம், திசையன்விளை வட்டங்களுக்கு உள்பட்ட குளங்களைத் தூா்வார வேண்டும், திருநெல்வேலி புகருக்கு உள்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் செவிலியா்களை நியமிக்க வேண்டும், அம்பாசமுத்திரம் முதல் வள்ளியூா் வரையிலான நெடுஞ்சாலையில் அபாயகரமான வளைவுகள் இருப்பதால் ரிப்ளக்டா் ஸ்டிக்கா் ஒட்டும் பணியை நெடுஞ்சாலைத்துறை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொதுச்செயலா் களந்தை மீராசா வரவேற்றாா். சுலைமான் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com