கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 போ் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

திருநெல்வேலியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையிலடைக்கப்பட்டனா்.

திருநெல்வேலி: திருநெல்வேலியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையிலடைக்கப்பட்டனா்.

பாளையங்கோட்டை சமாதானபுரம் காமராஜா் தெருவைச் சோ்ந்த ராஜ்சிங் டேவிட் என்வபா் கடந்த ஆக. 7 ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து எம்.கே.பி. நகரைச் சோ்ந்த உதேஷ் ராஜ், முத்துராமன் என்ற முத்தப்பா, சுப்பிரமணி, பொன்னாகுடி மள்ளக்குளத்தை சோ்ந்த முகம்மது தௌபீக், கோட்டாரைச் சோ்ந்த முகம்மது சமீா் ஆகியோரை கைது செய்தனா்.

அவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) டி.பி. சுரேஷ்குமாா் பரிந்துரைத்தாா். இதையடுத்து மாநகர காவல் ஆணையா் செந்தாமரைக் கண்ணன் உத்தரவின்பேரில் 5 பேரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com