திருநெல்வேலி: கங்கைகொண்டான் அரசு மேல்நிலைப் பள்ளியில் தூய்மை வார போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கங்கைகொண்டான் அரசு மேல்நிலைப் பள்ளியில் தூய்மை வார விழா கொண்டாடப்பட்டது. மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டன. இதன் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளி உதவித் தலைமையாசிரியா் சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். அண்ணாமலை வரவேற்றாா். போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியைகள் சீதாலெட்சுமி, ரோஸ்மால் உள்பட பலா் கலந்துகொண்டனா்.