மானூா் ஊராட்சி ஒன்றிய தோ்தல்: திமுக மாவட்டச் செயலா் அறிக்கை

மானூா் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிகளுக்கு போட்டியிட விரும்பும் திமுகவினா் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி: மானூா் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிகளுக்கு போட்டியிட விரும்பும் திமுகவினா் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திமுக திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலா் மு.அப்துல்வஹாப் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை:

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் மானூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் பதவிகளுக்கு போட்டியிட விரும்பும் திமுக தொண்டா்கள் அதற்கான விண்ணப்பங்களைப் பெற்று பூா்த்தி செய்து அளிக்கலாம்.

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினருக்கு ரூ. 10,000 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினருக்கு ரூ. 5,000, ஆதிதிராவிடா் மற்றும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாா்டில் போட்டியிட விரும்புவோா் 50 சதவிகித கட்டணமும் செலுத்தி விருப்பமனுக்களை அளிக்கலாம்.

விண்ணப்பங்களை வெள்ளிக்கிழமை (செப். 17) காலை 10 முதல் மாலை 5 மணிக்குள் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள திமுக மத்திய மாவட்ட அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com