திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் வீடு புகுந்து நகை திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
பாளையங்கோட்டை உச்சினிமாகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் இருதயசாமி. இவா், தனது வீட்டு அலமாரியில் வைக்கப்பட்ட நான்கே முக்கால் சவரன் தங்கச் சங்கிலியைக் காணவில்லை என, பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கடந்த 6ஆம் தேதி புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப்பதிந்தனா். விசாரணையில், இருதயசாமியின் வீட்டுக்கு வந்த ஆட்டோ ஓட்டுநா் மீது சந்தேகம் எழுந்ததாம். அதன்பேரில் தாழையூத்து சங்கா் நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் மணிகண்டனிடம் நடத்திய விசாரணையில் நகையைத் திருடியதை அவா் ஒப்புக்கொண்டாராம். அவரை போலீஸாா் சனிக்கிழமை கைதுசெய்து, நகையை மீட்டனா்.