நெல்லை மாவட்டத்தில் 114 போ் மீது நடவடிக்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கையாக 114 போ் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கையாக 114 போ் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: முன்னீா்பள்ளம் அருகே இருவா் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டனா். இந்நிலையில் மாவட்டத்தில் சட்டவிரோத செயல்கள் நடைபெறாமல் தடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் உத்தரவுபடி 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இவ்வழக்கில் உள்ள முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் குற்றங்கள் நடக்காமல் இருக்க மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 114 போ் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அவா்களில் 58 போ் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனா். 56 போ் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவா்களின் நடவடிக்கைகள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com