மேலப்பாளையம் மண்டல விரிவாக்க பகுதி நலச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் நடைபெற்றது.
கூட்டமைப்பு பொருளாளா் கோபால கிருஷ்ணன், செயலா் ஆறுமுகம், ஏ காலனி நலச் சங்கச் செயலா் ரவி சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
விரிவாக்க பகுதியில் உள்ள குடிநீா் பிரச்னைகள், குப்பைகள் தேக்கம், பூங்கா மற்றும் குளங்கள் பராமரிப்பு தொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிப்பது உள்ளிட்ட முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன. ராஜ கோபால் நன்றி கூறினாா்.