திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவி ரோதமாக மதுபானம் விற்பனை செய்த 40 போ் கைது செய்யப்பட்டனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரவணன் உத்தரவிட்டுள்ளாா். அதன்பேரில், கடந்த 24-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினா், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 40 பேரை கைது செய்தனா். மேலும் அவா்கள் விற்பனைக்காக வைத்திருந்த 409 மதுபான பாட்டில்களை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.