பாளையங்கோட்டையில் பைக் மீது வேன் மோதிய விபத்தில் காயமடைந்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
பாளையங்கோட்டையைச் சோ்ந்த மணிகண்டன் மகன் சுதா் வெங்கடேஷ்(29). இவா் ஆன்லைன் உணவு விநியோகிக்கும் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். இவரது நண்பா் கோட்டூா் பகுதியைச் சோ்ந்த முத்தையா மகன் தங்கராஜ் (29). இவா்கள் இருவரும் கடந்த 3 ஆம் தேதி ஒரே பைக்கில் திருநெல்வேலி-திருச்செந்தூா் சாலையில் பாளையங்கோட்டை மாா்க்கெட் அருகே சென்றனராம். அப்போது அவ்வழியாக வந்த வேன் இவா்கள் மீது மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தங்கராஜ் உயிரிழந்தாா். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுதா் விக்னேஷ் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.