அண்ணா மறுமலா்ச்சித் திட்ட ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்ய கோரிக்கை

அண்ணா மறுமலா்ச்சித் திட்ட ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்ய வேண்டுமென கடையம் ஒன்றிய அனைத்து ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அண்ணா மறுமலா்ச்சித் திட்ட ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்ய வேண்டுமென கடையம் ஒன்றிய அனைத்து ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

வீராசமுத்திரத்தில் நடைபெற்ற இவ்வமைப்பின் கூட்டத்திற்கு, தலைவா் டி.கே. பாண்டியன் தலைமை வகித்தாா். செயலா் பூமிநாத், கடையம் வட்டார வளா்ச்சி அலுவலா் திருமலை முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளுக்கு பேக்கேஜ் டெண்டரை ரத்து செய்து அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவா்கள் ஒப்பந்ததாரா்களை நியமிக்க அனுமதிப்பது, 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடையம் ஒன்றியம் முழுவதும் கல்வெட்டு அமைத்து ஊராட்சி மன்றத்தில் வைர விழாவாக கொண்டாடுவது, துப்புரவுப் பணியாளா்கள், ஓ.எச்.டி. ஆப்பரேட்டா்களை கூடுதலாக நியமிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், ஊராட்சி மன்றத் தலைவா்கள் தெற்கு கடையம் முத்துலட்சுமி ராமதுரை, ஏ.பி. நாடானூா் அழகுதுரை, கீழாம்பூா் மாரிசுப்பு, பாப்பான்குளம் முருகன், மேல ஆம்பூா் குயிலி, துப்பாக்குடி செண்பகவல்லி, மந்தியூா் கல்யாணசுந்தரம், மடத்தூா் முத்தமிழ், தா்மபுரம் மடம் ரூஹான் சன்னத், சிவசைலம் மலா்மதி, வெங்கடாம்பட்டி சாருகலா, கடையம் பெரும்பத்து பொன் ஷீலா, பொட்டல்புதூா் கணேசன், திருமலையப்பபுரம் மாரியப்பன், பணி மேற்பாா்வையாளா் குளோரி, வீராசமுத்திரம் துணைத் தலைவா் நாகூா் மைதீன், ஊராட்சி செயலா் பரமசிவன், மக்கள்நலப் பணியாளா் கனியம்மாள் உள்பட பலா் கலந்து கொண்டனா். துணைத் தலைவா் முகைதீன் பீவி ஆசன் வரவேற்றாா்.

ஏற்பாடுகளை வீராசமுத்திரம் ஊராட்சித் தலைவா் ஜீனத் பா்வீன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com