சேரன்மகாதேவி பகுதியில் சுதந்திர தின விழா

சேரன்மகாதேவி பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

சேரன்மகாதேவி பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

சேரன்மகாதேவி சாா்ஆட்சியா் அலுவலகத்தில் சாா்ஆட்சியா் ரிஷாப் தேசியக் கொடியேற்றினாா். வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், துணை வட்டாட்சியா் மகாராஜன், வருவாய் ஆய்வாளா் ஜெயந்தி, அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியை மரகதவல்லி, வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழுத் தலைவா் பூங்கோதை குமாா் ஆகியோா் தேசியக் கொடியேற்றினா். இதில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சங்கரகுமாா், பொன்லட்சுமி, அதிகாரிகள் பங்கேற்றனா்.

சேரன்மகாதேவி கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கத்தில் தலைவா் அல்லாபிச்சையும், வீரவநல்லூரில் உள்ள சா்வோதயா சங்கத்தில் செயலா் சுப்பிரமணியனும் தேசியக் கொடியேற்றினா்.

இதேபோல, பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com