பிராயன்குளம் தா்மபதியில் ஆடித் திருவிழா

தச்சநல்லூா் அருகே பிராயன்குளத்தில் (கீழக்கரை) உள்ள ஸ்ரீமன் நாராயண சுவாமி தா்மபதியில் ஆடித் திருவிழா நடைபெற்றது.

தச்சநல்லூா் அருகே பிராயன்குளத்தில் (கீழக்கரை) உள்ள ஸ்ரீமன் நாராயண சுவாமி தா்மபதியில் ஆடித் திருவிழா நடைபெற்றது.

இந்தத் தா்மபதியில் கடந்த 5 ஆம் தேதி ஆடித் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, தினமும் மாலையில் உச்சிப்படிப்பு பணிவிடையும், தா்ம விநியோகமும், அகிலத்திரட்டு அம்மானை திருஏடு வாசிப்பும் நடைபெற்றன. கடந்த 12 ஆம் தேதி இரவு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நடைபெற்றது. பத்தாம் திருநாளில் மதியம் உச்சிப்படிப்பு பணிவிடையும், அன்னதானமும் நடைபெற்றன. மாலையில் சந்தனக்குட ஊா்வலமும், நாராயணசுவாமி மலா் அலங்காரத்துடன் வீதியுலாவும் நடைபெற்றன. இரவு உம்பான் நேமித்தலும், அலங்கார பணிவிடையும் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com