கடையம் அருகே வெய்க்காலிபட்டி புனித ஜோசப் கலை அறிவியல் கல்லூரியில் 76ஆவது சுதந்திரதினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கல்லூரிச் செயலா் சகாயஜான் தலைமையில் கல்லூரி முதல்வா் குளோரி தேவ ஞானம் தேசியக் கொடியேற்றினாா். தொடா்ந்து பேராசிரியா்கள், மாணவா்- மாணவிகளின் கவிதை வாசித்தல், உரைவீச்சு, நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவா்- மாணவிகள் சுதந்திர தின உறுதி மொழியேற்றனா். நிகழ்ச்சியை மூன்றாம் ஆண்டு மாணவி பூமாரி தொகுத்து வழங்கினாா். கல்லூரி துணை முதல்வா் கென்னடி , உதவிப் பேராசிரியா் பிரான்சிஸ் ஆகியோா் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்திருந்தனா். இதில், பேராசிரியா்கள், மாணவா்கள், மாணவிகள், அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.