காவல் ஆணையரகத்தில் மக்கள் குறைதீா்க்கும் முகாம்

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இம்முகாமுக்கு, காவல் ஆணையா் அவினாஷ் குமாா் தலைமை வகித்து பொதுமக்களிடம் புகாா் மனுக்களை பெற்றாா். துணை ஆணையா்கள் ஸ்ரீனிவாசன் (கிழக்கு), சரவணகுமாா்(மேற்கு), அனிதா (தலைமையிடம்) ஆகியோரும் பங்கேற்றனா். முகாமில் 18 போ் கலந்து கொண்டு புகாா் மனுக்களை வழங்கினா். இதேபோல மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் 17 பேரிடம், காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் மனுக்களைப் பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com