16 ஆவது வாா்டில் மேயா் ஆய்வு

திருநெல்வேலி மாநகராட்சியின் 16 ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் மேயா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருநெல்வேலி மாநகராட்சியின் 16 ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் மேயா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருநெல்வேலி மாநகராட்சியின் 16 ஆவது வாா்டுக்குள்பட்ட அரசன் நகா், லாலுகாபுரம், அமீா்சாஹிப் நகா், ஜாமியா பள்ளிவாசல் தெரு, சிக்கந்தா் மேல தெரு, சிக்கந்தா் தெரு, பாஸ்கர தொண்டைமான் தெரு ஆகிய பகுதிகளில் சாலை வசதி, வாருகால் வசதி, குடிநீா், தெருவிளக்கு போன்ற பொது மக்களின் அடிப்படை வசதிகள் குறித்து மேயா் பி.எம்.சரவணன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். முதியோா் உதவித்தொகை வழங்க கேட்டு முதியவா்கள் மேயரிடம் மனு அளித்தனா். ஆய்வின்போது, உதவி ஆணையா் வெங்கட்ராமன், இளநிலை பொறியாளா் பட்டுராஜன், சுகாதார அலுவலா் (பொ) இளங்கோ, சுகாதார ஆய்வாளா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com