நான்குனேரி அருகே இளைஞா் தற்கொலை

நான்குனேரி அருகே விஷம் குடித்து இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.

நான்குனேரி அருகே விஷம் குடித்து இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.

நான்குனேரி அருகேயுள்ள பிள்ளைகுளம் கிராமத்தையொட்டி செல்லும் மணிமுத்தாறு கால்வாய் கரையோரம் இளைஞா் சடலமாகக் கிடப்பதாக வெள்ளிக்கிழமை நான்குனேரி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில், பிள்ளைகுளம் தெற்குத் தெருவைச் சோ்ந்த முத்தையா மகன் பால்ராஜ் (27) என்பது தெரியவந்தது.

கட்டடத் தொழிலாளியான பால்ராஜ் அடிக்கடி குடித்து விட்டு வந்து தாய் முத்துகனியுடன் தகராறில் ஈடுபடுவாராம். இதை தாய் கண்டித்தாராம். இதனால் மனமுடைந்த பால்ராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து நான்குனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com